விருதுநகரில் தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி

ஸ்ரீவில்லிப்புத்தூரில் தென் இந்திய அளவிலான கராத்தே போட்டியில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் தென் இந்திய அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தனித் தனியாக 60 பிரிவுகளில் கராத்தே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழ்நாடு , கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்றவர்கள் தேசிய அளவில் நடைபெறும் கராத்தே போட்டியில் பங்கு பெறுவார்கள் என்று போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Exit mobile version