சூரசம்ஹார திருவிழா: தூத்துக்குடியில் நவ. 2-ந் தேதி உள்ளூர் விடுமுறை

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் சூரசம்ஹார திருவிழாவையொட்டி, நவம்பர் 2-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூரில் சூரசம்ஹார திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் 2-ந் தேதி சிறப்பாக கொண்டாப்பட்டு வருகிறது. விழாவில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் மேற்கொள்கின்றனர். இந்நிலையில் சூரசம்ஹார திருவிழாவையொட்டி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நவம்பர் 2-ந் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version