விரைவில் மோடி ஆட்சி அகற்றப்படும் – வீரப்பமொய்லி

இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு மத்திய அரசு உரிய நிவாரண நிதி வழங்க காங்கிரஸ் கட்சி பரிந்துரை செய்யும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் பேசிய அவர், தமிழக கஜா புயல், கேரளா, கர்நாடக மாநிலங்களில் ஏற்பட்ட இயற்கை பாதிப்புகள் குறித்து நாடாளுமன்ற நிதி நிலைக்குழு ஆய்வு செய்ததாகவும், இது குறித்த இரண்டாவது கூட்டம் வரும் 27 ஆம் தேதி நடக்க உள்ளதாகவும் கூறினார். மேலும் இது குறித்த அறிக்கை நாடாளுமன்றத்தில் 20 நாட்களில் தாக்கல் செய்யப்படும் என கூறிய அவர், பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க காங்கிரஸ் சார்பில் பரிந்துரைக்கப்படும் என தெரிவித்தார். இந்தியாவில் உள்ள எதிர்கட்சிகள் காங்கிரஸ் கட்சியுடன் ஒன்றிணைந்து, மோடி தலைமையிலான ஆட்சி அகற்றப்படும் எனவும் வீரப்பமொய்லி கூறினார்

Exit mobile version