சோனியா காந்திக்காகவே காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சீதாரம் கேஸரி நீக்கப்பட்டார் – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

சோனியா காந்திக்காகவே காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சீதாரம் கேஸரி நீக்கப்பட்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் மஹாசந்த் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்தார். 

நேரு குடும்பத்திற்கு தொடர்பு இல்லாத ஒருவரை காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்வு செய்யத் தயாரா என்று சோனியா காந்திக்கு பிரதமர் மோடி சவால்விடுத்துள்ளார்.

சோனியா காந்திக்காக தலித் சமூகத்தை சேர்ந்த சீதாராம் கேஸரியை காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து தூக்கி எறிந்ததாக அவர் கூறினார். 4 தலைமுறையாக அதிகாரத்தில் இருந்த ஒரு குடும்பத்தால் நாடு பயனடையவில்லை என்று கூறிய பிரதமர் மோடி, மன்மோகன் சிங் ஆட்சி ரிமோட் மூலம் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

இவ்வாறான சூழலில் மக்களின் எதிர்பார்ப்புகளை காங்கிரஸ் எப்படி நிறைவேற்றும் எனவும் மோடி கேள்வி எழுப்பினார்.

 

Exit mobile version