கடும் குளிருக்கு இடையே , ராணுவ வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்

தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாகவே வெப்ப அளவு குறைந்து கடும் குளிர் வாட்டி வருகிறது. கடந்த15 ஆண்டுகளில் இல்லாத வகையில் குளிரானது 1.1 டிகிரி செல்ஸியஸ் ஆக சரிந்துள்ளது. இதனால் நகர் முழுவதும் பனிப்போர்வைக்குள் மூடியதுபோல் உள்ளது. இதனிடையே வருகிற 26ஆம் தேதி நாட்டின் 74வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்கான ஒத்திகை நிகழ்ச்சி டெல்லியில் நடைபெறுவது வழக்கம். அதன்படி கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் முப்படையை சேர்ந்த வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டனர். இதே போல் இந்திய ராணுவத்தின் ஆயுதங்கள் தாங்கிய வாகனம், பீரங்கிகள் மற்றும் விமான படையின் ஹெலிகாப்டர்களும் ஒத்திகையில் ஈடுபட்டனர்.

Exit mobile version