பொதுமக்களுக்கு இலவசமாக தண்ணீர் வழங்கும் காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு

கோடை வெயிலில் இருசக்கர வாகனத்தின் மூலம் இலவசமாக பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கி வரும் காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெயிலினால் கொடுமையால் மக்கள் தண்ணீர் இன்றி தவித்து வருவதை கண்ட, போக்குவரத்து காவலர் மணிகண்ணன் தனது வாகனத்தில் இலவசமாக தண்ணீர் கொடுத்து வருகிறார்.

வெயிலின் தாக்கத்தால் ஒரு நாளைக்கு 4 கேன்கள் வரை தனது சொந்த செலவில் வாங்கி வந்து பொதுமக்களுக்கு தாகம் தணித்து வருகின்றார். இந்த நிலையில், இலவசமாக தண்ணீர் வழங்கி தாகத்தை போக்கும் போக்குவரத்து காவலரின் இந்த செயலுக்கு பொதுமக்கள் தங்களது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version