தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் சிவகங்கை மாணவர்கள் தேர்வு

டெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள சிவகங்கையை சேர்ந்த 3 மாணவிகள் கடுமையான பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் மாணவ மாணவிகளுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு கடந்த மூன்று ஆண்டுகளாக பயிற்சி பெற்றுவரும் மாணவிகள் நேத்ரா, சண்முகப்பிரியா மற்றும் சரிகா ஆகிய மூன்று மாணவிகள் தற்போது தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நடைபெற்ற சென்னை மண்டல அளவிலான போட்டிகளில் சிவகங்கையிலிருந்து 11 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் வெற்றிபெற்ற நேத்ரா, சண்முகபிரியா மற்றும் சரிகா ஆகியோர் வரும் ஜூன் மாதத்தில் டெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். இதற்காக தினந்தோறும் கடுமையான பயிற்சிகளை மூன்று மாணவிகளும் மேற்கொண்டுள்ளனர்.

 

Exit mobile version