விழி மூளை அறுவை சிகிச்சையின் போது பக்தி பாடல்களை பாடி அசத்திய இளைஞர்

ஜெய்ப்பூரில் விழி மூளை அறுவை சிகிச்சையின் இளைஞர் பக்தி பாடல்களை பாடியது வைரலாகி வருகிறது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் ஹல்மாஸ்மால் ஜங்கிர். 30 வயதான இவர், ஒருவிதமான வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து, சிகிச்சைக்காக ஜெயப்பூரில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். மூளையில் அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்றும், அப்போது விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து, மருத்துவர் கே.கே. பன்சல் தலைமையில் 8 மருத்துவர்கள் கொண்ட குழு ஹல்மாஸ்மால் ஜங்கிருக்கு அறுவை சிகிச்சை செய்தது. அப்போது, ஹனுமான் சாலிசா என்ற நூலில் இருந்து பக்தி பாடலை ஹல்மாஸ்மால் பாடினார்.

Exit mobile version