தினகரனின் சட்டமன்ற அலுவலகத்தில் 20 ரூபாய் நோட்டை வீசி எறிந்து பெண்கள் முற்றுகை

சென்னை ஆர்.கே நகரில் உள்ள தினகரனின் சட்டமன்ற அலுவலகத்தில் 20 ரூபாய் நோட்டை வீசி எறிந்து பெண்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆர்.கே நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டிடிவி தினகரன், இருபது ரூபாய் நோட்டை டோக்கனாக கொடுத்து, ஒரு வாக்குக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்குவதாக உறுதியளித்ததாக தெரிகிறது. ஆனால் வெற்றி பெற்ற பின்னர், தினகரன் இதுவரை தொகுதி பக்கம் வந்து மக்களை பார்க்காமல் ஏமாற்றி வருவதாக ஆர்.கே நகர் பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளில் இதே போன்று மக்களை தினகரன் ஏமாற்றக்கூடாது என்பதற்காக அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் 20 ரூபாய் நோட்டுகளை சட்டமன்ற அலுவலகத்தின் வளாகத்தில் வீசி எறிந்தனர்.

Exit mobile version