தொழில்நுப்டம் மூலம் இயற்கையை மாற்ற, மிகப்பெரிய ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்: மயில்சாமி அண்ணாதுரை

தொழில் நுட்பம் மூலம் இயற்கையை மாற்ற முடியுமா என்பதை அறிய மிகப் பெரிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டி உள்ளதாக இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் நடைபெற்ற தனியார் பள்ளி நிகழ்ச்சியில் இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டார். இளம் வயதிலிருந்தே அறிவியல் அறிவை வளர்த்துகொள்வது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஆலோசனைகளை அவர் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியர்களை விண்ணுக்கு அனுப்புவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தொழில்நுட்பம் மூலம் இயற்கையை மாற்ற முடியுமா என்பது மிகப்பெரிய ஆய்வு என்றும் அதற்கான பணிகளை செய்ய வேண்டியுள்ளது என்றும் கூறினார்.

Exit mobile version