உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

பிரேசிலில் நடைபெறும் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகளில், இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில், இந்தியாவின் யஷ்வினி சிங் தேஸ்வால் தங்கம் வென்று அசத்தினார். 22 வயதான யஷ்வினி, கடந்த முறை உலக சாம்பியனான உக்ரைன் நாட்டின் ஒலேனா கோஸ்டவிச்-ஐ வென்று, தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

இதுவரை இந்தியாவுக்கு 3 தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன. இளவேனில் வாலறிவான், அபிஷேக் வர்மாவை தொடர்ந்து யஷ்வினி சிங் தேஸ்வாலும் தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version