மஹா சிவராத்திரியை முன்னிட்டு குமரியில் சிவாலய ஓட்டம் தொடக்கம்

மஹா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருமலை, திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, திருவிடைக்கோடு, பள்ளியாடி, நட்டாலம் உள்ளிட்ட12 இடங்களில் சிவாலயங்கள் உள்ளன. இந்த சிவாலயங்களில் ஆண்டுதோறும் மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலய ஓட்டம் நடைபெறுவது வழக்கம். இதன்படி,15 நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள், திருமலை மகாதேவர் ஆலயத்தில் இருந்து சிவாலய ஓட்டத்தை தொடங்கினர். இதனால் அனைத்து சிவாலயங்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

சிவாலய ஓட்ட நாளான இன்று குமரி மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 

Exit mobile version