ஷாருக்கானின் மனிதநேயம்.. முடக்குவாத நோயினால் பாதிக்கப்பட்ட ரசிகருக்கு ஷாருக்கான் கொடுத்த பரிசு..!

நேற்று மாலை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் இடையே ஐபில் டி20 போட்டியானது நடைபெற்றது. இந்தப் போட்டியில் பெங்களூர் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி முதலில் தடுமாறினாலும் குர்பாஸ், ரின்கு சிங் ஆகியோரின் பேட்டிங் உதவியாலும் சர்துல் தாக்கூரின் அதிரடி பேடிங்காலும் வருன் சக்கரவர்த்தியின் சுழலினாலும் மாபெரும் வெற்றியைப் பெற்றது.

போட்டி முடிந்ததும் வெற்றிக்கொண்டாட்டத்தில் ஈடுபட்ட கொல்கத்தா அணியின் இணை ஓனர் ஷாருக்கான் தன்னுடைய இரசிகர் ஒருவரை சந்தித்தார். அதன் காணொளி சமூக வலைதளங்களின் வைரலாக பகிரப்பட்டது. அந்த இரசிகரின் பெயர் ஹர்சுல் கொய்ங்கா. அவர் மூளை முடக்குவாத நோயினால் பாதிக்கப்பட்டவர். அவர் ஷாருக்கானின் வெறித்தனமான இரசிகராகவும் அவரின் கொல்கத்தா அணியின் பற்றாளராகவும் இருக்கிறார். நேற்றையப் போட்டியினை கொல்கத்தா அணியின் ஜெர்சியை அணிந்துகொண்டு வந்து கண்டுகளித்தார். போட்டி முடிந்ததும் ஷாருக்கான் ஹர்சுலை சந்தித்து அவருடன் புகைப்படமும் வீடியோவும் எடுத்துக்கொண்டார். பிறகு அவருக்கு அன்பாக முத்தம் கொடுத்தார். ஏற்கனவே ஹர்சுலுடன் 2018 ஆம் ஆண்டு இதேபோல சந்திப்பை மேற்கொண்டிருந்தார் ஷாருக்கான். அதுவும் அன்றைய காலக்கட்டதில் அதிகம் பகிரப்பட்டது.

Exit mobile version