1000 கோடியினை வசூல் செய்த ஷாருக்கானின் ‘பதான்’!

ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் ஆகியோர் நடித்து கடந்த மாதம் ஜனவரி 25ஆம் தேதி வெளியானதுதான் பதான் திரைப்படம். 4 வருடத்திற்கு பிறகு வெளியாகியிருக்கு ஷாருக்கானின் திரைப்படம் என்பதால் அவரது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியினை ஏற்படுத்தியிருந்தது. இந்த திரைப்படத்தில் சல்மான்கான் கெளரவ வேடத்தில் தோன்றி மிரட்டியிருந்தார். சித்தார்த் ஆனந்த் இயக்கிய இந்தத் திரைப்பட்ம்  இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது. முதல் நாளில் இருந்தே வசூலில் சக்கை போடு போட்டது இந்தத் திரைப்படம். இந்தி சினிமா சமீப காலத்தில் மிகப்பெரிய வெற்றியினைத் தரவில்லை என்ற விமர்சனத்தினை தகர்த்தது பதான். உலகம் முழுவதும் 20 நாட்களில் 1000 கோடி ரூபாயினை இத்திரைப்படம் வசூலித்துள்ளது.

இந்தத் திரைப்படத்தை தயாரித்த யாஷ்ராஜ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் மட்டும் 593 கோடியும், மற்ற நாடுகளில் 360 கோடியும் சேர்த்து மொத்தம் 953 கோடி ரூபாயினை வசூலித்தது. இந்த வார முடிவிற்குள் நிச்சயம் 1000 கோடி ரூபாயினை பதான் திரைப்படம் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அட்லி இயக்கும் ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார். அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதியும் ஜோடியாக நயன் தாராவும் நடித்து வருகிறார்கள்.

Exit mobile version