சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து தலைமறைவான குற்றவாளி -போக்சோ சட்டத்தின் கீழ் சிறையிலடைப்பு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து தலைமறைவான குற்றவாளியை கைது செய்த காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் சிறையிலடைத்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் கீழவடகரை பகுதியை சேர்ந்த 5 வயது சிறுமியை, அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவர் சிறுமியை கடத்தி பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததையடுத்து நாகராஜ் தலைமறைவானார். இதனையடுத்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில், அங்குள்ள மலைப்பகுதியில் பதுங்கியிருந்த நாகராஜை கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் நீதி மன்ற உத்தரவின் பேரில் நாகராஜை சிறையில் அடைத்தனர்.

Exit mobile version