ஏரியில் கலக்கும் கழிவுநீர் ! நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை

செம்பாக்கம் பெரிய ஏரியில் இறைச்சி மற்றும் மனித கழிவுகள் கலப்பதால் நீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதி குடியிருப்பு வாசிகள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனர். மேலும் ஏரி ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என அப்பகுதி குடியிருப்பு வாசிகள் குற்றம்சாட்டுகின்றனர். விடியா திமுக அரசு பாதாளசாக்கடை திட்டத்தை கொண்டு வந்து ஏரியில் கழிவு நீர் கலக்காதவாறு நடவடிக்கை எடுப்பதுடன் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version