ஹீமோபிலியா, தலசீமியா நோய்களுக்கு சிகிச்சை அளிக்க தனிப்பிரிவு

தென் தமிழகத்தில் முதன்முறையாக ஹீமோபிலியா மற்றும் தலசீமியாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

ஹீமோபிலியா மற்றும் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தனிப்பிரிவு தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வந்தது. இந்த நிலையில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் 30 படுக்கை கொண்ட தனிப்பிரிவு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் நோயாளிகள் ரத்தம் செலுத்திக் கொள்ளவும் போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version