புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாட புத்தகங்கள் வழங்க நடவடிக்கை –  அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு வாரகாலத்திற்குள் தேவையான பட புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் உள்ள பள்ளியில் பவள விழா நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். அதனைத்தொடர்ந்து 26 ஆயிரத்து 297 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், குறைவான மாணவர்கள் பயிலும் அரசு பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை என கூறினார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒரு வார காலத்திற்குள், அவர்களுக்கு தேவையான பாட புத்தகங்கள் வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Exit mobile version