சென்னை,தீவுத்திடலில் விறுவிறு பட்டாசு விற்பனை!

சென்னை, தீவுத்திடல் பட்டாசு கண்காட்சியில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை தீவுத்திடலில், கடந்த 29-ம் தேதி பட்டாசு கண்காட்சி தொடங்கியது. 70 கடைகள் அமைக்கப்பட்டு, பட்டாசு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான பட்டாசுகளை வாங்கிச் செல்கின்றனர்.

பொதுமக்கள் சிரமம் இன்றி பட்டாசுகளை வாங்கி செல்லும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் தகுந்த ஏற்பாடுகளை செய்துள்ளது. தீபாவளி புது வரவாக, பிளவர் ட்ரீ லெடர், ஷாட்ஸ் பவுன்டைன் பாட் உள்ளிட்ட பட்டாசு ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

பட்டாசு வெடிப்பதற்கு உச்சநீதிமன்றம் கட்டுப்பாடுகள் விதித்திருந்தாலும், பட்டாசுகள் வாங்குவதற்கான ஆர்வம் குறையவில்லை என்று பொதுமக்கள் கூறியுள்ளனர்.

 

Exit mobile version