ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பதவிகளுக்கான இரண்டாம் நிலைத் தேர்வுகள் இன்று தொடக்கம்

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தினால் நடத்தப்படும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பதவிகளுக்கான மெயின் தேர்வுகள் இன்று தொடங்குகின்றன.

ஐ.ஏ.எஸ் ஐ.பி.எஸ் பதவிகளுக்கான தேர்வு மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. நிகழாண்டிற்கான முதன்மைத்தேர்வு கடந்த ஜூன் 2ம் தேதி நடந்தது. சுமார் 5 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதிய தேர்வில் 11 ஆயிரத்து 845 பேர் வெற்றி பெற்றனர். இந்நிலையில் இரண்டாம் நிலைத் தேர்வுகள் இன்று தொடங்கி 5 நாட்கள் நடைபெறுகிறது. நாடு முழுவதும் 24 நகரங்களில் இரண்டாம் நிலைத் தேர்வுகள் நடைபெறுகின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரை 610 பேர் மெயின் தேர்வு எழுத தகுதி பெற்றுள்ளனர். சென்னை சூளை ஜெயகோபால் கரோடியா பள்ளியிலும், எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் தேர்வுகள் நடைபெறுகின்றன. இதையொட்டி தேர்வு மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Exit mobile version