விசிக நிர்வாகிக்கு சொந்தமான நிறுவனத்தில் 2-வது நாளாக சோதனை

திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிக்கு சொந்தமான நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சி மன்னார்புரம் பகுதியில் விசிக மாநில நிர்வாகி ராஜா என்பவருக்கு சொந்தமான எல்ஃபின் நிதி நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இந்த நிறுவனத்தில் வரி ஏய்ப்பு நடப்பதாக கிடைத்த தகவலையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகல் 10 பேர் கொண்ட குழுவினர் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

நிலம் வாங்கி தருவதாக கூறி பொதுமக்களிடம் வசூலித்த பணத்தில் 5 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக இந்த நிறுவனத்தை சேர்ந்த ரமேஷ் குமார் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை நடைபெற்றுவருகிறது.

கைது செய்யப்பட்டுள்ள ராஜா, ரமேஷ்குமார் ஆகியோரை நேற்று நள்ளிரவு முதல் ரகசிய இடத்தில் வைத்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

2வது நாளாக தொடரும் சோதனையில், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பணம் குறித்த தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது. பெரம்பலூரில் விசிக நிர்வாகி தங்கதுரை என்பவரின் காரில் இருந்து 2 கோடியே 10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version