ஏஎன்-32 ரக விமானம் மாயம்: 2-வது நாளாக தேடும் பணி தொடர்கிறது

இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன் 32 போக்குவரத்து விமானம் மாயமானதில் இதுவரை, எந்த தகவலும் கிடைக்காததால் 2-வது நாளாக தேடுதல் பணி தொடர்கிறது.

அசாம் மாநிலத்தின் ஜோர்ஹாட் விமானப்படை தளத்தில் இருந்து நேற்று நண்பகல் 12.25 மணிக்கு ஏன் 32 போக்குவரத்து விமானம் புறப்பட்டது. 13 பயணிகளுடன் அருணாச்சலப் பிரதேசத்தின் மெசுகா விமானப்படை தளம் நோக்கி சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை விமானம் இழந்தது.

இதையடுத்து மாயமான விமானத்தை தேடும் பணியில் இந்திய விமானப்படை விமானங்கள் ஈடுபட்டுள்ளன. இந்திய ராணுவம் மற்றும் இந்தோ – திபேத் எல்லை பாதுகாப்பு படையினரும் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாயமான விமானம் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்காததால், தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version