ஒட்டன்சத்திரத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த தனியார் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைக்கு சீல்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த தனியார் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம், தாராபுரம் சாலை அருளானந்தா நகரில் இரவு நேரத்தில் ரகசியமாக குடிநீர் சுத்திகரிப்பு ஆலை செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் அளித்தனர். இதையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் நடராஜன் தலைமையில் ஆய்வில் ஈடுபட்ட அதிகாரிகள், ஆலை உரிமம் இன்றி செயல்படுவது மட்டுமின்றி தரமற்ற குடிநீர் விநியோகம் செய்யப்படுவதையும் கண்டுபிடித்தனர். இதையடுத்து குடிநீர் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.

Exit mobile version