பாலினம் குறித்து தெரிவித்ததால் ஸ்கேன் மையத்திற்கு சீல்!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கருவில் உள்ளது ஆணா, பெண்ணா என ஸ்கேன் செய்த மருத்துவமனை மையத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை அறிவது சட்டப்படி குற்றம் என்ற சட்டம் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் எடப்பாடி, அம்மன் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் தம்பட்டியைச் சேர்ந்த தம்பதியினர் கருவில் உள்ள குழந்தையை ஸ்கேன் செய்ய சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது, மருத்துவர் கண்ணன் என்பவர் பாலினம் பற்றி தெரிவித்துள்ளார். இதேபோன்று சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை மீது, ஊரக சுகாதார துறை இயக்குனர் அலுவலகத்திற்கு பல்வேறு புகார்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், ஸ்கேன் மையத்திற்கு சீல் வைத்தனர்.

Exit mobile version