பள்ளி சீருடைகள் அணிந்திருந்தாலே பேருந்து டிக்கெட் எடுக்காமல் பயணிக்கலாம் : போக்குவரத்து துறை

மாணவர்கள் பள்ளி சீருடைகள் அணிந்திருந்தாலே பேருந்து டிக்கெட் எடுக்காமல் பயணிக்கலாம் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் இன்று திறக்கப்பட உள்ளன. இந்தநிலையில் பள்ளி மாணவர்களுக்கான புதிய இலவச பயண அட்டை வழங்கும் வரை பழைய அட்டையை பயன்படுத்தி பேருந்துகளின் பள்ளி மாணவர்கள் பயணிக்கலாம் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே டிக்கெட் எடுக்காமல் பேருந்துகளில் பயணிக்கலாம் என்று தெரிவித்திருக்கும் போக்குவரத்து துறை, இதுகுறித்து பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

Exit mobile version