ஆயிரம் ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை நோட்டீஸ்

கடந்த பொதுத்தேர்வின் போது விடைத்தாள்களை சரியாக திருத்தாதது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறைக்கு புகார் வந்தது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட பள்ளி கல்வித்துறை 17 ஏ பிரிவின் கீழ் விளக்கம் கேட்டு சுமார் ஆயிரம் ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. தேர்வு முறைகேட்டில் மாணவர்களும் ஈடுபட்டிருந்தால் தண்டனை வழங்கவும் முடிவு செய்துள்ளது. முறைகேடுகள் நிரூபணமானால் இரண்டு பருவத் தேர்வுகளும் எழுத தடை செய்யப்படும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
Exit mobile version