சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சயன், மனோஜ் நேரில் ஆஜர்

கொடநாடு எஸ்டேட் விவகாரம் தொடர்பாக சயன் மற்றும் மனோஜ் இருவரும் சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

கொடநாடு எஸ்டேட் விவகாரத்தில் சயன் மற்றும் மனோஜ் மீது நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல்துறையில் மத்திய குற்றப்பிரிவின் அதிமுக தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி ராஜன் சத்யா புகார் அளித்திருந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் டெல்லியில் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். இதையடுத்து, இருவரையும் நீதிபதி முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். இந்தநிலையில், எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சயன் மற்றும் மனோஜ் ஆகியோர் நீதிபதி சரிதா முன்னிலையில் இன்று ஆஜராகினர்.

Exit mobile version