பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவிடம் 8 மணி நேரமாக தொடர்ந்த விசாரணையால் பரபரப்பு

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் 8 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.

கடந்த ஆண்டு சசிகலா பங்குதாரராக உள்ள நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதணை நடத்தினர்.மேலும் அவரது உறவினர்கள் வீடுகள், டிடிவி. தினகரன்,விவேக் ஆகியோரது வீடுகள் உள்ளிட்ட 180 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

5 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையின் அடிப்படையில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை முடிவுசெய்தது.

இதையடுத்து சிறைத்துறை அதிகாரிகளிடம் முறைப்படி அனுமதி பெறப்பட்டது. இந்த நிலையில் ஒரு பெண் அதிகாரி உள்பட 5 அதிகாரிகள் உள்ளடக்கிய குழுவினர் பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் வைத்து சசிகலாவிடம் விசாரணை நடத்தினர்.

காலையில் தொடங்கிய விசாரணை 8 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இரவு 7.30 மணிக்கு முடிவடைந்த விசாரணை நாளையும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது

 

 

 

Exit mobile version