சர்கார் கதை திருடப்பட்டது இல்லை -படத்தின் வசனகர்த்தா ஜெயமோகன் மறுப்பு

சர்க்கார் கதை திருட்டு தொடர்பாக அப்படத்தின் வசனகர்த்தா ஜெயமோகன் விளக்கமளித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் கதை, செங்கோல் படத்தின் கதையிலிருந்து எடுக்கப்பட்டதாக திரைக்கதையாசியர் சங்கத் தலைவர் பாக்கியராஜ் குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பாக ஏ.ஆர்.முருகதாஸ் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவ்வழக்கின் தீர்ப்பு வரும் 30-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் படத்தின் வசனகர்த்தாவும் ,எழுத்தாளருமான ஜெயமோகன் இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இது தொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கள்ள ஓட்டு என்ற பிரபலமான ஒற்றை வரியை வைத்தே கதை உருவாக்கப்பட்டதாகவும், ஒரு நிகழ்வை பற்றி யார் வேண்டுமானாலும் சிந்திக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

Exit mobile version