தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தில் மாதிரி வாக்குப்பதிவு

கோபிசெட்டிபாளையம் அருகே தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களிடையே 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.

மக்களவை தேர்தலில் அனைத்து வாக்களார்களும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தின் மூலம் தேர்தல் நடத்தும் அலுவலர்களால் அனைத்து பகுதிகளிலும் விழிப்பணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக திருப்பூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வேட்டைகாரன்கோவில் தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களிடையே 100 சதவீதம் வாக்களார்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாதிரி வாக்குபதிவு நடைபெற்றது.

மாதிரி வாக்குபதிவில் தொழிலாளர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வாக்குபதிவு இயந்திரத்தில் வாக்களித்து வாக்குகள் சரியாக பதிவாகின்றனவா யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொண்டனர்.

Exit mobile version