இந்தியா – பாகிஸ்தான் இடையேயான சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நாளை தொடக்கம்

எல்லையில் நிலவிய பதற்றமான சூழ்நிலை காரணமாக நிறுத்தப்பட்ட இந்தியா பாகிஸ்தான் இடையேயான சம்ஜோதா ரயில் சேவை நாளை முதல் மீண்டும் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா நடத்திய விமானத் தாக்குதலை தொடர்ந்து பிப்ரவரி 26ஆம் தேதிலாகூர் முதல் டெல்லி வரையிலான சம்ஜோதா ரயில் சேவையை பாகிஸ்தான் அரசு நிறுத்தியது. தொடர்ந்து இந்தியாவும் பிப்ரவரி 28ஆம் தேதி முதல் சம்ஜோதா ரயில் சேவையை நிறுத்தியது. விமானப்படை அதிகாரி அபிநந்தனை பாகிஸ்தான் அரசு இந்தியாவிடம் ஒப்படைத்ததை தொடர்ந்து, எல்லையில் பதற்றம் தணிந்ததால் மீண்டும் நாளை முதல் சம்ஜோதா ரயில் சேவை தொடங்கப்படுகிறது.

Exit mobile version