இந்திய விமானப்படை விமானிகளுக்கு சல்யூட் : ராகுல் காந்தி

எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் இருக்கும் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை இந்திய விமானங்கள் தாக்கி அழித்தன. இன்று அதிகாலை 3.30 மணிக்கு 12 மிராஜ் 2 ஆயிரம் ரக விமானங்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டன. இந்திய விமான படை நிகழ்த்திய தாக்குதலில் 300 தீவிரவாதிகள் வரை பலியாகியிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே பதிலடி தாக்குதலில் ஈடுபட்ட இந்திய விமானப்படை வீரர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டிருக்கும் அவர், இந்திய விமானப்படை விமானிகளுக்கு தான் தலை வணங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version