சேலம் கோடை விழா மலர்க்கண்காட்சியில் இரண்டரை லட்சம் மலர் தொட்டிகள் அமைக்க நடவடிக்கை

சேலம் மாவட்டம் கோடை விழா மலர் கண்காட்சியில் இரண்டரை லட்சம் மலர் தொட்டிகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், ஆண்டுதோறும் கோடை விழா மலர் கண்காட்சி சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 44 ஆம் ஆண்டு மலர் கண்காட்சி ஜூன்2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி அண்ணா பூங்காவில் மலர் கண்காட்சி அமைக்கப்படுகிறது.

உடன் காய்கறி கண்காட்சி, பழக்கண்காட்சியும் நடத்தப்பட உள்ளன. கோடை விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் ரோகிணி தெரிவித்தார்

Exit mobile version