சேலம் ஆத்தூர் அருகே மாபெரும் ஜல்லிக்கட்டு விழா கோலாகலம்

சேலம் ஆத்தூர் அருகே புத்திரகவுண்டன்பாளையத்தில் ஜல்லிக்கட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு கொடியசைத்து தொடங்கிவைத்த இந்த ஜல்லிக்கட்டில், நூற்றுக்கணக்கான காளைகள், மற்றும் மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். விழாவில் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, மாவட்ட எஸ்.பி. உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, வாடிவாசலில் சீறிப்பாய்ந்த காளைகளை, மாடுபிடிவீரர்கள் உற்சாகமாக அடக்கினர். இதையடுத்து, வெற்றிபெற்ற மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

Exit mobile version