ராஜஸ்தானில் முதலமைச்சர் பதவிக்கு சச்சின் பைலட் – அசோக் கெலாட் இடையே கடும் போட்டி

ராஜஸ்தானில் முதலமைச்சர் பதவிக்கு, முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும், மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முதலமைச்சரை தேர்வு செய்ய சட்டமன்ற உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட்டுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சச்சின் பைலட்டுக்கு ஆதரவாக அவருடைய தொண்டர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கட்சியின் தலைமையின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியின் முடிவை வரவேற்போம். தொண்டர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என சச்சின் பைலட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

 

 

Exit mobile version