மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், செர்பியாவிற்கு சுற்றுப்பயணம்

அரசு முறைப் பயணமாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரும் 7ந் தேதி செர்பியா செல்கிறார். 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சரை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். ஆலோசனையின் போது இரு நாடுகளின் நல்லுறவு குறித்தும், பிராந்திய மற்றும் சர்வதேச விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது. தொடர்ந்து அந்நாட்டு அதிபரையும் அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து ஆலோசனை நடத்தயிருக்கிறார்.

Exit mobile version