ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசி மூலம் பிரதமர் மோடியிடம் பேச்சு

புல்வாமா தாக்குதல் சம்பவம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதின், பிரதமர் மோடியை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு தனது அனுதாபங்களை தெரிவித்தார்.

புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 40 வீரர்கள் மரணமடைந்தனர். இந்த தாக்குதல் மற்றும் அதன் பிந்தைய சம்பவங்கள் காரணமாக தொடர்ந்து இரு நாட்டிலும் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தொலைபேசி வாயிலாக இந்திய பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு பேசினார். புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்கு தனது அனுதாபத்தையும் அவர் தெரிவித்தார். ரஷ்யாவின் உறுதியான ஆதரவுக்கு பிரதமர் மோடி தனது நன்றியை தெரிவித்துகொண்டார்.

Exit mobile version