காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி வரும் 10-ம் தேதி கிராம அலுவலர்கள் தர்ணா

 

காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி வரும் 10-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தர்ணா போராட்டம் நடத்த இருப்பதாக கிராம நிர்வாக அலுவலர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், அலுவலகத்திற்கு மின்சாரம், பிரிண்டர் போன்ற உபகரணங்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடபோவதாக கிராம நிர்வாக அலுவலர்கள் அறிவித்திருந்தனர். அதன்படி திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்றிரவு முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் வரும் 10-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தர்ணா போராட்டம் நடத்த இருப்பதாக கிராம நிர்வாக அலுவலர்கள் அறிவித்துள்ளனர்.

Exit mobile version