கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள் கடத்தல்

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதை பொருட்களை கடத்தி வந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் சான்றோர் குப்பத்தில், பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், ஆம்பூர் நகர போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, லாரி ஒன்றை மடக்கி சோதனை செய்தபோது, கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து குட்கா பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

சுமார் 50 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி, பாதுகாப்பிற்காக முன்னால் சென்ற கார் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், 5 நபர்களை கைது செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த ஆம்பூர் நகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version