ராணிப்பேட்டையில் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோயிலில் ரூ.32 லட்சம் உண்டியல் காணிக்கை

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோயிலில், 32 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது.

பிரசித்தி பெற்ற சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோயிலுக்கு ஆந்திரா,கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசித்து செல்கின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்கு ஏற்ப பணம், நகை உள்ளிட்டவற்றை உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர்.

இந்நிலையில், லட்சுமி நரசிம்மர் மலைக்கோயில், மலையடிவாரம், ஊர்க்கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடந்தது. காணிக்கை எண்ணும் பணியில் கோயில் ஊழியர்கள் மற்றும் பள்ளி மாணவிகள், தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். இதில்,  32 லட்சத்து 49 ஆயிரத்து 144 ரூபாயை உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி இருந்தனர். மேலும் 125 கிராம் தங்கம், 230 கிராம் வெள்ளியும் கிடைத்துள்ளது.

Exit mobile version