வயலில் பதுக்கி வைத்திருந்த ரூ.3 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்

காஞ்சிபுரம் அருகே வயல்வெளியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெளிமாநில மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள தண்டரை புதுச்சேரியில் வயல்வெளியில் வெளி மாநில மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தண்டரைபுதுச்சேரி கிராமத்தில் போலீசார் நடத்திய சோதனையில், திருமூர்த்தி என்பவர், வயல் வெளியில் 90 பெட்டிகளில் நான்காயிரத்து 300 மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், தலைமறைவாக உள்ள திருமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Exit mobile version