கஜா புயல் நிவாரண நிதிக்கு ரூ.127 கோடி: தமிழக அரசு

கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 127 கோடி ரூபாய் வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஜா புயலால் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்தப் பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடைகள் குவிந்து வருகிறது. தொழிலதிபர்கள், அரசியல் கட்சிகள், திரையுலகினர் என பல்வேறு தரப்பினர் நிதி வழங்கி வருகின்றனர். இந்நிலையில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 127 கோடியே 22 லட்சம் ரூபாய் பெறப்பட்டு இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Exit mobile version