ரவுடி மீது கல்லை போட்டு கொலை.. முன்விரோதம் காரணமா ?

சென்னை, ஆவடி அருகே ரவுடியின் தலை மீது கல்லை போட்டு கொலை செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ஆவடி அடுத்த பூம்பொழில் நகர் பூங்கா தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் என்கின்ற புஜ்ஜி வயது 30. இவர் முன்னாள் ரவுடித்தனம் கட்டபஞ்யாத்து போன்றவற்றை செய்து வந்திருக்கிறார். இந்த நிலையில் ராஜேஷ் அவரது வீட்டின் அருகே உள்ள கறி கடையில் நேற்றிரவு அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
 
தகவல் அறிந்த ஆவடி டேங் பேக்டரி காவல்துறையினர் உடலை கைபற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் ராஜேஷ் நேற்று இரவு தனது  நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.

அப்போது நண்பர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ,அதனால் ஆத்திரத்தில் அவரது நண்பர் அருகில் இருந்த கல்லை எடுத்து தலையில் போட்டு கொலை செய்திருக்க வேண்டும். பின்னர் ராஜேஷுடன் மது அருந்திய அனைவரும் அங்கிருந்து தப்பியிருக்கிறார்கள். ராஜேஷ் வேலைக்கு செல்லாததால் அவரது மனைவி தனது மூன்று குழந்தைகளுடன் சில ஆண்டுகளுக்கு முன் அவரை பிரிந்து தனது தாய் வீட்டிற்கு சென்றவர் இன்று வரை வரவில்லை.

ராஜேஷ் அவருடைய மனைவியை பிரிந்து 3 வருடங்கள் ஆன நிலையில் தனது தாயுடன் சொந்த வீட்டில் வசித்து வந்தார். மேலும் என்ன காரணத்திற்காக ராஜேஷ் கொல்லப்பட்டார். மேலும் என்ன காரணத்திற்காக ராஜேஷ் கல்லால் அடித்து கொல்லப்பட்டு யாரெல்லாம் அவருடன் மது அருந்தினார்கள் என்பது குறித்து ஆவடி டேங்க் பேக்டரி காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version