சட்ட விரோதமாக பட்டாசு தொழிற்சாலை நடத்தி வந்த பிரபல ரவுடி கைது

கோவில்பட்டி அருகே அனுமதியில்லாமல் பட்டாசு தொழிற்சாலை நடத்திய பிரபல ரவுடியை காவல்துறையினர் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே புளியங்குளம் பகுதியில் அனுமதி இல்லாமல் பிரபல ரவுடி மாணிக்கராஜ் என்பவர் சட்ட விரோதமாக பட்டாசு ஆலை நடத்தி வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து ரேந்து பணியில் ஈடுபட்டிடுந்த காவல்துறையினர், பருவக்குடி சாலையில் வந்த சரக்கு ஆட்டோவை சோதனை செய்ததில், அதில் பட்டாசுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆட்டோவில் இருந்த பிரபல ரவுடி மாணிக்கராஜூவிடம் நடத்திய விசாரணையில், புளியங்குளம் பகுதியில் சட்ட விரோதமாக பட்டாசு ஆலை நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து பட்டாசு தொழிற்சாலையை சோதனை செய்த காவல்துறையினர், 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசு மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மாணிக்கராஜ் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version