காதலர் தினத்தையொட்டி ரோஜா மலர்களின் வருகை அதிகரிப்பு

காதலர் தினத்தை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு மார்கெட்டில் பல்லாயிரக்கணக்கான மலர்கள் விற்பனைக்கு வந்துள்ளது.

உலகம் முழுவதும் பிப்ரவரி 14 ஆம் தேதியான நாளை, காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, காதலர்கள் தங்கள் வருங்கால மனைவிக்காக சிகப்பு ரோஜா மலர்களை பரிசளிப்பது வழக்கம். இதனால், சென்னை கோயம்பேடு சந்தைக்கு, கர்நாடகா, கேரளா போன்ற பல்வேறு மாநிலங்களிலிருந்து, பல்லாயிரக்கணக்கான ரோஜா மலர்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

காதலர் தினத்தையொட்டி ரோஜா மலரின் விற்பனை இரண்டு மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version