வீரமரணம் அடைந்த சிவசந்திரன் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவி

தமிழகத்தை சேர்ந்த சி.ஆர்.பி.எஃப் வீரர் அரியலூர் சிவசந்திரன் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய நடிகர் ரோபோ சங்கர் நிதியுதவி வழங்கினார்

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மரணமடைந்தனர். அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சிவசந்திரன் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய நடிகர் ரோபோ சங்கர், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாம் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வீரமரணம் அடைந்த வீரர்களின் தியாகமே காரணம் என்று கூறினார். 

Exit mobile version