பொன்னேரி அருகே இரண்டு ஏ.டி.எம் மையங்களில் கொள்ளை முயற்சி

பொன்னேரி அருகே இரண்டு ஏ.டி.எம் மையங்களில், இயந்திரங்களை உடைத்து மர்ம நபர் ஒருவர் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே செயல்பட்டு வரும் இரண்டு ஏ.டி.எம் மையங்களில் நேற்று இரவு மர்மநபர் ஒருவர், வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றுள்ளார். அப்போது அலாரம் ஒலிக்க, அங்கிருந்து தப்பிய மர்ம நபர், அருகில் உள்ள மற்றொரு வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றுள்ளார். அங்கும் அலாரம் ஒலித்ததால் அங்கிருந்து தப்பியுள்ளார்.

அலாரம் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் சோழவரம் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிசிடிவி காட்சியைக் கொண்டு கொள்ளையனை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version