திருவாரூர் அருகே நகைக்கடையில் கொள்ளை

திருவாரூர் அருகே மாங்குடியில், நகைக்கடை ஒன்றின் சுவற்றில் துளை போட்டு, 8 கிலோ வெள்ளிப்பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர். 30 கிராம் தங்கமும் திருடப்பட்டிருக்கிறது. சிசிடிவி ஹார்டு டிஸ்க்கையும் கழற்றிச் சென்றுள்ளனர். நகைக்கடை உரிமையாளர் தன்ராஜ் அளித்த புகாரின் அடிப்படையில், தடயங்களை சேகரித்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version