News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home Top10

அரிசி ஆலை அதிபர் மகன் கடத்தல்… ரூ.3 கோடி கொடுத்து மகனை மீட்ட தந்தை..!

Web Team by Web Team
August 25, 2021
in Top10, TopNews, செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
Reading Time: 1 min read
0
அரிசி ஆலை அதிபர் மகன் கடத்தல்… ரூ.3 கோடி கொடுத்து மகனை மீட்ட தந்தை..!
Share on FacebookShare on Twitter

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அரிசி ஆலை அதிபர் மகன் மூன்று கோடி ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில், ஹாலிவுட் படங்களை பார்த்து, கடத்தலில் ஈடுபட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

3 அரிசி ஆலைகள்….12 பண்ணை வீடுகள்…பிரமாண்ட திருமண மண்டபம்…கணக்கிட்டால் கணினிக்கே கண்ணைக் கட்டும் அளவிற்கு காந்தி தாத்தாக்களை கைவசம் வைத்திருப்பவர் ஈஸ்வர மூர்த்தி. காங்கேயம் நகர் வாழ் கரன்சி அரசன். இவர் ராஜாங்கத்தின் ஒற்றை இளவரசர் சிவ பிரதீப்.

ஈஸ்வர மூர்த்தியிடம் எவ்வளவு பணம் இருந்ததோ, அதை விட அதிகமான பாசம், மகன் மீது இருந்தது. இளவரசர் கேட்டு இதுவரை அவர் இல்லை என்று சொன்னதே இல்லை. இனோவா கேட்டார்… இரவோடு இரவாக இறக்கப்பட்டது. ஆலை கேட்டார்.. அதன் நிர்வாகம் அப்போதே ஒப்படைக்கப்பட்டது.

மகன் மீது தந்தை பொழிந்த அன்பு கண்டு ஊரே கண் வைத்த நிலையில் அதை பயன்படுத்தி பணம் பறிக்க திட்டமிட்டனர் சிலர். அதன்படி காங்கேயம் அருகே காரில் சென்ற சிவபீரதீப்பை காரோடு சேர்த்து கடத்தி சென்றது ஒரு கும்பல். தங்களை போலீஸ் என்று கூறி சிவபிரதீப்பையும் அவரது ஓட்டுநரையும் தங்கள் காரில் ஏற்றிக் கொண்டு அவர்கள் வந்த இனோவா காரையும் ஓட்டிச் சென்றுள்ளனர்.

காரில் ஏறிய பிறகுதான் தான் கடத்தப்பட்டதை உணர்ந்துள்ளார் சிவபிரதீப். எனினும் 7 பேர் சுற்றி இருக்க அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. சிவபிரதீப்பின் ஓட்டுநர் எண்ணில் இருந்து ஈஸ்வர மூர்த்திக்கு போன் செய்த கடத்தல் காரர்கள், மகனின் உயிருக்கு 3 கோடி ரூபாய் விலை வைத்துள்ளனர். போலீசுக்கு போகும் பட்சத்தில் சிவபிரதீப் சிவலோகப் பதவிக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்றும் மிரட்டியுள்ளனர்.

கடத்தல் கும்பல் சொன்ன இடத்திற்கு சொன்ன தொகையோடு சென்று மகனை மீட்டு கொண்டு வந்தார் தந்தை. 3 நாட்கள் இது குறித்து யாரிடமும் அவர் வாய் திறக்கவில்லை. மகனின் பாதுகாப்பை பலப்படுத்தி கொண்டார். பின் காவல் நிலைய படியேறினார்.

போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது ஆலையில் வேலை செய்யும் சக்திவேல் என்பவர் சிவபிரதீப்பின் நடவடிக்கைகளை நோட்டமிடுவதும், செல்போனில் அதனை யாரிடமோ தெரிவிப்பதுமாக இருந்துள்ளார். இதையடுத்து அவருக்கு வலை வீசிய போலீசார், மதுரை லாட்ஜில் பதுங்கியிருந்த சக்திவேலையும் அவரது கூட்டாளிகளையும் கைது செய்தனர்.

3 பேர் தலைமறைவான நிலையில் பிடிபட்ட 5 பேரிடம் இருந்து 1 கோடியே 90 லட்ச ரூபாயையும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் சிவ பிரதீப்பின் ஆலையில் ஆப்பரேட்டராக வேலை செய்யும் சக்திவேலும் பாலாஜியும் பல ஹாலிவுட் படங்களை பார்த்து ஒரு வார காலமாக திட்டமிட்டு கடத்தல் சம்பவத்தை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அரங்கேற்றியது தெரியவந்தது.

கரன்சி அரசர், இளவரசர் மீது காட்டிய எல்லையில்லா பாசத்தை சாதமாக்கி கொண்டு மிரட்டினால் போலீஸுக்கு போக மாட்டார்கள் என்று எண்ணி பணப்பறிப்பில் ஈடுபட்டதும் அம்பமானது. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்த கதையாக, சம்பளம் தரும் முதலாளியையே கடத்தி சம்பவம் செய்த சக்திவேல் அண்ட் கோவின் செயல் அப்பகுதி வாசிகளை அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது.

 

Tags: #KidnappingcaseDMKAtrocitiesnewsjTiruppur
Previous Post

தூக்கத்திற்கு தொந்தரவு அளித்ததால் ஆத்திரம்… பக்கத்து வீட்டுக் காரரை அடித்து கொன்ற பிரதர்ஸ்…!!

Next Post

பொறியியல் கல்லூரிகளில் அதிகம் பேர் விண்ணப்பம்

Related Posts

rajpath road to karthavya road
இந்தியா

காலனித்துவத்தை குறிக்கும் வகையிலுள்ள ’ராஜ்பாத் சாலை’ பெயர், ’கர்த்தவ்யா சாலை’ என மாற்றம்!

September 6, 2022
’ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!
அரசியல்

’ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

September 5, 2022
Dead woman lying on the floor under white cloth with focus on hand
இந்தியா

ஆண் நண்பர்களுடன் பேசியதால் 5-ஆம் வகுப்பு மாணவி கொலை! பெற்றோர் அறங்கேற்றிய கொடுஞ்செயல்!

September 5, 2022
rishi sunak liz trous
அரசியல்

இங்கிலாந்தின் பிரதமர் பதவிக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு! அடுத்த பிரதமர் யார்?

September 5, 2022
edappadi k palanisamy
அரசியல்

வ.உ.சி.யின் 151-வது பிறந்தநாளையொட்டி இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்தம் படத்திற்கு மலர்தூவி மரியாதை!

September 5, 2022
hindu muslim vinayakar procession
தமிழ்நாடு

தூத்துக்குடியில் மதநல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் விநாயகர் ஊர்வலத்தைத் தொடங்கிவைத்த இஸ்லாமியர்கள்!

September 5, 2022
Next Post
பொறியியல் கல்லூரிகளில் அதிகம் பேர் விண்ணப்பம்

பொறியியல் கல்லூரிகளில் அதிகம் பேர் விண்ணப்பம்

Discussion about this post

அண்மை செய்திகள்

ஈரோடு இடைத்தேர்தல் : தேர்தல் பணிக்குழுவில் கூடுதல் பொறுப்பாளர்கள் நியமனம்!

ஈரோடு இடைத்தேர்தல் : தேர்தல் பணிக்குழுவில் கூடுதல் பொறுப்பாளர்கள் நியமனம்!

January 27, 2023
கே.எல். ராகுல் திருமணத்திற்கு தோனி கொடுத்தப் பரிசு!

கே.எல். ராகுல் திருமணத்திற்கு தோனி கொடுத்தப் பரிசு!

January 27, 2023
2022ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் – சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு!

2022ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் – சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு!

January 27, 2023
புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்!

புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்!

January 27, 2023
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது!

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது!

January 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist