மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துறை தலைவர் மீது ஆராய்ச்சி மாணவி பாலியல் புகார்

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில், ஆராய்ச்சி மாணவியிடம் பணம் பெற்றதாகவும், பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், துறை தலைவர் மீது பதிவாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக திரைப்படம் மற்றும் மின்னனு ஆய்வுகளுக்கான மையத்தில்,  ஆராய்ச்சி மாணவியாக யு.டி. முத்து என்பவர் படித்து வருகிறார். கேரளாவை சேர்ந்த இவர், கடந்த ஒரு வருடமாக மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில், துறைத் தலைவர் கர்ண மகாராஜன் தன்னை பி.எச்.டி பட்டம் பெறவிடாமல், தொடர்ந்து மிரட்டி பணம் கேட்டு வந்ததாக, பல்கலை கழக பதிவாளர், கல்வித்துறை அதிகாரி, மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளார். இதனால் தான் மன உலைச்சலுக்கு ஆளாகி, உடல்நிலை பாதிக்கப்பட்டு பல்கலை கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் கூறியுள்ளார். பல்கலை கழக துணை வேந்தரை தனியாக சந்திக்க வேண்டும் என்பதற்காக, தன்னை அழைத்து செல்வதாக, கர்ண மகாராஜன் வற்புறுத்தியாகவும் மாணவி முத்து தெரிவித்துள்ளார்.

Exit mobile version